மேட்டூர் அணையின் நீர்வரத்து 89 கன அடியாக இருந்த நிலையில் 286 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் சரிவதாக இருக்கிறது. தற்போது போதிய அளவில் மழை இல்லாததால் 89 கன அடியாக இருந்த நீர்வரத்து 256 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது