மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 67.70 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2128 கன அடியிலிருந்து 3367 கன அடியாக அதிகரித்துள்ளது. இதில் குடிநீர் தேவைக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது .மேலும் அணையின் நீர்வரத்து 30.75 டிஎம்சி ஆக உள்ளது.