மெக்ஸிகோவில் 14 வயதுக்கு கீழ் 13 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அந்தத் துறை ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளின் மரணத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரண அறிக்கைகளின்படி, க்ளெப்சியெல்லா ஆக்ஸிடோகா எனும் பாக்டீரியா ரத்த நாள தொற்றுகளை உண்டாக்கி குழந்தைகளின் உயிரை பறித்துள்ளது. இப்போது 20 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 13 குழந்தைகள் மரணமடைந்துள்ளன. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.