முதல்முறையாக மெக்சிகோ நாட்டில் பெண் அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வரலாற்று நிகழ்வு நடந்து ஒரு சில மணி நேரங்களில் அந்நாட்டின் வீதியில் பெண் மேயர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் தொடர்ச்சியாக பொதுவெளியில் அரசியல் தலைவர்கள் கொல்லப்படுவது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லத்தீன் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக மெக்சிகோவில் பெண் ஒருவர் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். கிலவ்டியா செயின்பவும் அதிபராக பொறுப்பேற்ற சில மணி நேரங்களில், யோலாண்டோ சான்செஸ் என்ற பெண் மேயர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.