மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரில், நேற்று முன்தினம் இரவு இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. இதில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகாபுல்கோ நகரில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றில், நேற்று முன் தினம் இரவு மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கருதப்படும் நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அகாபுல்கோ நகரின் மற்றொரு பகுதியில், 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தெரியவில்லை. இந்த இரு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.