மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் ஓடிஸ் சூறாவளி நேற்று முன்தினம் கரையை கடந்தது. அப்பொழுது கனமழை பெய்தது. அப்போது அதிவேக காற்று வீசியதால் கடற்கரை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அக்கா புல்கோ பகுதியில் சூறாவளி கரையை கடந்தது. அப்போது அங்கு மரங்கள் சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 27 பேர் பலியாகினர். அதோடு நான்கு பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.