மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 13% உயர்ந்து, 56.5 பில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் கணிப்பு வருவாயான 54.52 பில்லியன் டாலர்களை விட உயர்வாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மென்பொருள் வர்த்தகத் துறைகளில் நல்ல முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவான அசூர் (azure) வருவாய் 29% உயர்ந்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வருவாய் 13% உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அறிக்கை வெளியான பிறகு, அமெரிக்க வர்த்தகத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 6% உயர்ந்து வர்த்தகமாகின.