மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், இந்திய நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக, தனது மென்பொருள் மற்றும் இதர சேவைகளுக்கு 11% விலை உயர்வை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல், வணிகப் பயன்பாட்டிற்கான மென்பொருளின் இந்திய ரூபாய் மதிப்பு 4.5% உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இணையம் வாயிலான மென்பொருள் சேவைகள் பெறுவதற்கான இந்திய ரூபாய் மதிப்பு 9% உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க சந்தையில் நிலவும் அதே விற்பனை மதிப்பை இந்தியாவிலும் கொண்டு வர, விண்டோஸ் GGWA, தனது கட்டணங்களை 11% உயர்த்தி அறிவித்துள்ளது. அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் உரிமை ஒப்பந்தங்கள் இதன் மூலம் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது.