மூன்று ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய மைக்ரோசாப்ட்

January 25, 2024

மைக்ரோசாப்ட் நிறுவனம் 3 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கம் முதலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் பெற்று வந்தன. கிட்டதட்ட 1.5% அளவில் பங்கு மதிப்பு உயர்ந்தது. தற்போதைய நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 404.72 டாலர்கள் ஆகும். பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதன் மூலம், உலகின் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் 3 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

நடப்பு ஆண்டு தொடக்கம் முதலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் பெற்று வந்தன. கிட்டதட்ட 1.5% அளவில் பங்கு மதிப்பு உயர்ந்தது. தற்போதைய நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 404.72 டாலர்கள் ஆகும். பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதன் மூலம், உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் 2 ம் இடத்துக்கு மைக்ரோசாப்ட் முன்னேறி உள்ளது. முதலிடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, ஓபன் ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களில் மைக்ரோசாப்ட் ஈடுபட்டு வருவதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu