உலகளாவிய முறையில், ஆபீஸ் மற்றும் டீம்ஸ் செயல்பாடுகளை தனித்தனியாக பிரிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் எழுப்பப்பட்ட நம்பகத்தன்மை குற்றச்சாட்டை அடுத்து மைக்ரோசாப்ட் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொரோனா பரவலின் போது, வீடியோ கால் தளமான டீம்ஸ் மிகவும் பிரபலமடைந்தது. இதே போன்ற சேவைகளை வழங்கி வரும் மற்ற நிறுவனங்கள், ‘மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தளத்துடன் இணைத்து டீம்ஸ் தளத்தை வழங்குவதால், சந்தையில் நியாயமற்ற சாதகத்தை பயன்படுத்திக் கொள்கிறது’ என குற்றம் சுமத்தின. கடந்த 2020இல், சேல்ஸ் போர்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மற்றும் டீம்ஸ் செயல்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை செய்து வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆபீஸ் மற்றும் டீம்ஸ் தளங்களை தனித்தனியாக பிரிப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.