இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் அருகிலுள்ளது என்று அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதர் மைக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு பேட்டியளித்த அவர், "ஒப்பந்தத்தை இறுதி செய்ய இன்னும் சில பிரச்சினைகள் மீதமுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமும் அரசாங்கத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஒப்பந்தம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. சில நாட்களுள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, ஹிஸ்புல்லா ஒப்பந்த விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு வழங்கப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தெற்கு லெபனானிலிருந்து இரண்டு படைகளை வெளியேற்றும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.