நைஜீரியாவில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவர்கள் பலியாகினர்.
ஆப்பிரிக்காவின் சம்பாரா மாகாணம், கவுரா நமோடா நகரில் உள்ள இஸ்லாமிய மதப்பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கடந்த இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மாணவர்களை மீட்டனர். ஆனால், 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











