துனிசியாவின் மத்தியதரைக் கடலோர பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஸ்ஃபாக் பகுதியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ள கடல் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. கடலோரக் காவல் படை ஐந்து பேரை மீட்டனர். 20 உடல்களை மீட்டது. அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்கின்றன. விபத்துக்குள்ளானபோது படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பதைப் பற்றிய தகவல் தெரியவில்லை. கடல் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து துனிசியா மேற்கொண்டிருந்தாலும், அகதிகளின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.