இத்தாலியால் மீட்கப்படும் அகதிகளை தங்கள் நாட்டு முகாம்களில் தங்க வைக்கும் ஒப்பந்தத்திற்கு அல்பேனிய நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
சர்வதேச கடல் பகுதியில் இருந்து இத்தாலியால் மீட்கப்படும் அகதிகளை தங்கள் நாட்டு முகாம்களில் தங்க வைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அல்பேனிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இடதுசாரி சோசியலிஸ்ட் கட்சி பெரும்பான்மை வகிக்கிறது. இதற்கான வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 77 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு எதிராக ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை. எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். அதையடுத்து அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அல்பேனிய பிரதமர் ஏதி ராமாவுக்கும், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி ஐரோப்பிய நாடுகளை அடைக்கலம் தேடி வரும் அகதிகள் நடுகடலில் மீட்கப்படும்போது அவர்களுக்கு சட்டபூர்வ அனுமதி கிடைக்கும் வரை அல்பேனியாவில் தங்க வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் 3000 அகதிகள் வரை அல்பேனியாவுக்கு அனுப்ப முடியும். அந்த வகையில் 36 ஆயிரம் அகதிகள் வரை அல்பேனியா வர முடியும். இதற்கு வலதுசார் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.