புயல் காரணமாக தமிழகத்தின் பிற மாநிலங்களில் இருந்து லாரிகள் சென்னைக்குள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாக பல சரக்கு லாரிகள் சென்னைக்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால்,ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உட்பட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர பிற மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 2000க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால்
ஒரு நாளைக்கு ரூபாய் 18 கோடி வீதம் தினம் 4 நாட்கள் மட்டும் 72 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகள், முட்டைகள், மளிகை பொருட்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்து வருகின்றன.