இஸ்லாமிய மாத பிறை கண்டறியப்பட்டதால் மிலாடி நபி தேதியை அறிவித்த தலைமை காஜி.
இஸ்லாமியர்கள் முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி எனக் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித குர்ஆனை ஓதுவது, ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் தானம் செய்வது முக்கிய வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தென்பட்டுள்ளது. எனவே, மிலாடி நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வரும் அக்டோபர் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.














