கேரளா, கர்நாடகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கேரள பால் நிறுவனமான 'மில்மா' பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கர்நாடக பால் கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே 6 மாதங்களில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பால் விலையை உயர்த்தி இருப்பது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.