சென்னையில், தொடர்ந்து 3 நாட்களாக ஆவின் பால் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் சரியான நேரத்தில் ஆவின் பால் விநியோகம் கிடைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆவின் பால் விநியோகம் பாதிப்படைந்ததற்கு முக்கிய காரணமாக, ‘பால் வரத்து குறைவு’ சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு, பால் தாமதமாக வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த தொழிலாளர்கள் வருகையும் குறைந்துள்ளதால், பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் பால் விநியோகம் தீவிர பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.