ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான டெண்டர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க திட்டமிட்டு ரூ.34.75 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியிட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு, சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்படும். இந்த மினி பூங்கா கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கேற்ற குளிர்சாதன வசதி, மின்தூக்கி, உயர் மின் இணைப்பு, பாதுகாப்பு, சுகாதார வசதி, உடற்பயிற்சி கூடம், உணவகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டதாக அமையும். 12 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.