ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மைய வளாகத்தில் விண்வெளி ஏவு தளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 50 மாணவ மாணவிகளுக்கான பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களிடம், இந்தியாவிற்கு ரஷ்யா அதிக உதவிகள் செய்துள்ளது. நம் பள்ளி மாணவ மாணவர்கள் அங்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் சொல்லித் தருவதை கற்றுக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
நம் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் தேவையானவற்றை செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றியும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மிக விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று கூறினார்.