சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம் ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மீண்டும் நேற்று அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது. அதன் பின் அமைச்சர் பொன்முடி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் வீட்டிற்கு சென்று மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். மேலும் முதலமைச்சர் பெங்களூருவில் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தபோது அமைச்சர் பொன்முடியுடன் தொலைபேசியில் பேசிய நிலையில் தற்போது நேரில் சந்தித்துள்ளனர்.