பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகியிருந்தார். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கூட பொன்முடிக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளார். அவரது பதவியை திருச்சி சிவா ஏற்கிறார். இதன் மூலம், தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து திருச்சி சிவா மாற்றப்பட்டு, அவர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.