அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து மருத்துவ காரணங்களை சுட்டி காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது உயர் நீதிமன்றத்திலும் இவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்துள்ளது. அதில் மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் மனு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மருந்து எடுத்து கொண்டால் இது சரி செய்ய கூடியது தான் எனவும் தெரிவித்துள்ளார்.