ஜி எஸ் டி ஆர் 1 ஏ படிவம் தொடர்பான அறிவிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஜி எஸ் டி ஆர் 1 படிவத்தில் திருத்தங்களை கொண்டு வந்து ஜிஎஸ்டி ஆர் 1 ஏ என்ற படிவத்தை அறிமுகம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது. அதன்படி, முக்கிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜி எஸ் டி ஆர் 1 ஏ படிவம் மூலம் வணிகர்கள் தாக்கல் செய்யும் தகவல்களில் பிழைகள் இருந்தால் திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி ஆர் 1 ஏ மூலம் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் தானாகவே புதுப்பிக்கப்படும். இதனால், ஜிஎஸ்டி வரி தாக்கல் தொடர்பாக வணிகர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறையும். எனவே, ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு வணிகர்களால் வரவேற்கப்படுகிறது.