அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள மினிசெட்டா மாகாணத்தில் மினியாபோலீஸ் நகரின் வைக்கியர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு சம்பவம் இன்று நடைபெற்றது. இங்கு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.