12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி

பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தியதில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வினை சுமார் 7,50,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினார். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணியானது கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. பின்னர் விடைத்தாள் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்க […]

பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தியதில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வினை சுமார் 7,50,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினார். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணியானது கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. பின்னர் விடைத்தாள் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மாணவிகள் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள்கள் செலுத்தியதில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு மேலே 58 என பதிவு செய்துள்ளார். மேலும் விடைத்தாளில் தமிழ் ஆசிரியர் தமிழில் கையெழுத்து இடாமல் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விடைத்தாள் நகலை பெற்ற மாணவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் விடைத்தாள்களில் மேலே குறிப்பிடும் மதிப்பெண்கள் மட்டுமே பதிவேற்றப்படும் என்பதால் மாணவருக்கு 30 மதிப்பெண்கள் குறைந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu