மியான்மர் எல்லைக்குள் இரண்டு தமிழர்கள் நுழைந்ததால் சுட்டுக் கொலை செய்த சம்பவம்

July 8, 2022

மியான்மர்: மணிப்பூரில் மோரே நகரில் பி மோகன்(27), மற்றும் எம் ஐயனார்(28) என்ற இருவரும் வசித்து வந்துள்ளனர். இருவரும் தமிழ் நண்பரைச் சந்திக்கச் மியான்மரின் தமு பகுதிக்கு சென்றுள்ளனர்.பிறகு மதிய வேளையில் மோரே வியாபாரிகள் துப்பாக்கி துளைக்கப்பட்டு காயங்களுடன் இருந்த இருவரது உடல்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த இருவர்களில் ஒருவருக்கு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயமும் மற்றொருவருக்கு தலையின் பக்கவாட்டில் காயமும் ஏற்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்து மோரே காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை […]

மியான்மர்: மணிப்பூரில் மோரே நகரில் பி மோகன்(27), மற்றும் எம் ஐயனார்(28) என்ற இருவரும் வசித்து வந்துள்ளனர். இருவரும் தமிழ் நண்பரைச் சந்திக்கச் மியான்மரின் தமு பகுதிக்கு சென்றுள்ளனர்.பிறகு மதிய வேளையில் மோரே வியாபாரிகள் துப்பாக்கி துளைக்கப்பட்டு காயங்களுடன் இருந்த இருவரது உடல்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த இருவர்களில் ஒருவருக்கு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயமும் மற்றொருவருக்கு தலையின் பக்கவாட்டில் காயமும் ஏற்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்து மோரே காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மோரே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோரே பகுதியில் கணிசமான அளவில் தமிழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தினால் மோரே மக்கள் நேற்றும் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன செய்தது. இதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டனர். எந்தவித வாகனங்களும் இயக்கபடவில்லை. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அவர்களின் உடல்களை மீட்க மோரேயில் உள்ள இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu