மஹிந்திரா நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 67% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் 3452 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 24310 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% உயர்வாகும். குறிப்பாக, மஹிந்திரா நிறுவனத்தின் வாகன பிரிவில் 22% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன பிரிவின் வருவாய் மட்டுமே 18405.46 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், வாகன பிரிவில் 18% உயர்வு பதிவாகி, மஹிந்திரா நிறுவனம் தனது வரலாற்று உச்ச எண்ணிக்கையை தொட்டுள்ளது. அத்துடன், மஹிந்திரா நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 24% உயர்ந்து 4397 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.