அலைபேசி தயாரிப்பு: இந்தியாவுக்கு 2வது இடம்

October 1, 2022

உலக அளவில் அலைபேசி தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், பிரதமரின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை துவங்கி வைக்கவுள்ளேன். இதன் வாயிலாக 6500 கோடி ரூபாய் மூதலீடு மற்றும் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம், […]

உலக அளவில் அலைபேசி தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், பிரதமரின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை துவங்கி வைக்கவுள்ளேன். இதன் வாயிலாக 6500 கோடி ரூபாய் மூதலீடு மற்றும் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

தற்போது 97 சதவீத அலைபேசிகள் இந்தியாவிலேயே தயாரித்து பயன்படுத்தப்படுகின்றன. அலைபேசிகள் தயாரிப்பில் உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மின்னணு தொழில் துறையில் 4 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் 2020ல் 50 ஆயிரம் கோடி அலைபேசிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu