வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் 25 வட்டாரங்களில் 33 சதவீதத்திற்கும் மேலான பயிர்கள் சேதம் அடைந்தது. இதனை மிதமான வேளாண் வறட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிகவும் குறைவான அளவில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில், மணமேல்குடி , சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி ,காளையார் கோவில், மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார் கோவில், பரமக்குடி, ஆர். எஸ். மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேல் நீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்களில் 33 சதவீதத்திற்கும் மேலான பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனை தமிழக அரசு மிதமான வேளாண் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளானதாக அறிவித்துள்ளது.