தமிழ்நாட்டில் 431 சத்துணவு மையங்களுக்கு நவீன எந்திரங்கள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளன.
தமிழ்நாட்டில், 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி சத்துணவுத் திட்டம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. 1-5-ம் வகுப்பு மற்றும் நடுநிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்களில் 5 வகை கலவை சாதங்களுடன் மசாலா முட்டைகள் வழங்கப்படுகின்றன. அதிகளவு பயனாளிகளை கொண்ட மையங்களில், முட்டையை உரிக்க சமையலர்களுக்கு சிரமங்கள் இருக்கின்றன. இதையடுத்து, 431 பள்ளி சத்துணவு மையங்களுக்கு நவீன முட்டை உரிக்கும் எந்திரம் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.