70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் மோடி 

மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலும் 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி […]

மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலும் 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். அந்த வகையில் மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலும் 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் 45 இடங்களில் 'ரோஜ்கார் மேளா' நடக்கிறது. அவர்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu