ரஷ்யாவில் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்திய ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றார். அவர் அங்கு அதிபர் புதினை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாஸ்கோவில் 22 வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெறும். அதில் கலந்துகொண்டு அவர் அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். மேலும் இருநாட்டுப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து பேசுவார்கள். அப்பொழுது இருதரப்பு உறவுகள், பொருளாதார, சர்வதேச பிரச்சனைகள், வர்த்தகம், எரிசக்தி, கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், கல்வி, கலாச்சாரம், என பல்வேறு துறைகள் குறித்து இருவரும் பேசுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்திய வீரர்களை விடுவிக்குமாறு பிரதமர் மோடி புதினை கேட்டுக்கொள்வார். அதோடு ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து மோடி உரையாடுகிறார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார்.