நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி இரவு 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்கிறார் நரேந்திர மோடி.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக மட்டும் 240 இடங்களை கைப்பற்றியது. எனவே மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி காபந்து பிரதமராக தொடங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவு முர்முவை சந்தித்த மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிகளின் ஆதரவு கடிதத்தை அளித்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்பதாம் தேதி இரவு 7. 15 மணிக்கு மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது