ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜி7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில் ஹிரோஷிமாவில் இன்று காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். காந்தி சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளபோது மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்து செல்லும் என்றார்.