மான்டெர்ரி ஓபனில் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்
மெக்சிகோவில் நடைபெற்ற மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா நியூசிலாந்தின் லுலு சனுடன் மோதினா. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா, 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இவ்வாறு, அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.