நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில், நைஜர் ஆற்றில் நேற்று ஒரு படகு கவிழ்ந்தது. இந்த படகில் சுமார் 300 பேர் பயணித்தனர். அவர்கள் இஸ்லாமிய மத விழாவில் பங்கேற்று வீடு திரும்பியவர்கள் ஆவர். மொக்வா பகுதியில் இரவு 8 மணியளவில் படகு கவிழ்ந்ததால், அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 150 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் முதல் தகவலின்படி, 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் சிக்கியவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்திற்கு காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.