ஆஸ்திரேலிய கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதி டோபிஸ் இன்லெட். இங்கு உள்ள கடற்கரை பகுதியில் சுமார் 160 பைலட் திமிங்கலங்கள் நேற்று காலை கரை ஒதுங்கின. இதில் 26 திமிங்கலங்கள் மூச்சு விட முடியாமல் ஆபத்தான நிலையில் இறந்து போயின. மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சியில் கடல் உயிரியலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒரு திமிங்கலம் தவறாக கரையில் மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலங்கள் வரிசையாக சிக்கி இருக்க வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.