பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 20-க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத குழுக்கள் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்குள் ஊடுருவ ஐ.எஸ்.அமைப்பினர் காத்திருப்பதாக மத்திய உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் இதற்காக தயார் நிலையில் இருப்பதும், எந்த நேரத்திலும் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகையில், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிவரும் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தவும் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் காஷ்மீரில் நடக்கவுள்ள ஜி 20 மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கில்தான் இந்த ஊடுருவலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.