500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய அரசு வழங்கக்கூடிய நாக்பூர் லைசன்ஸ் மற்றும் சென்னை லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு உரிமங்கள் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு விபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டு […]

தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய அரசு வழங்கக்கூடிய நாக்பூர் லைசன்ஸ் மற்றும் சென்னை லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு உரிமங்கள் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு விபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி பேரியம் நைட்ரெட் என்ற பச்சை உப்பு மற்றும் தொடர் வெடிக்கான தடையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பேன்சி ரக தொடர் வெடிக்கான சாட்டை வெடிகளையும் அதில் பயன்படுத்தப்படும் பச்சை உப்பையும் கண்டுகொள்ளாமல் விட்டது. மேலும் தொடர் வெடியின் வகைகளில் ஒன்றான சரவெடி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே மூடி வருவதால் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தொடங்கியுள்ளனர். இதில் 500 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu