மாலி : சட்டவிரோத தங்க சுரங்கத்தில் விபத்து - 70 க்கும் மேற்பட்டோர் பலி

January 25, 2024

மாலி நாட்டில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டு சுரங்கத்துறை அமைச்சகம், விபத்து நடந்ததை உறுதி செய்துள்ளது. தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாடு, உலகின் 3 வது பெரிய தங்கம் உற்பத்தியாளராகும். இந்த நாட்டில் அடிக்கடி […]

மாலி நாட்டில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலி நாட்டு சுரங்கத்துறை அமைச்சகம், விபத்து நடந்ததை உறுதி செய்துள்ளது. தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாடு, உலகின் 3 வது பெரிய தங்கம் உற்பத்தியாளராகும். இந்த நாட்டில் அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டவிரோத சுரங்கங்கள் செயல்படுவதால், அதிக விபத்துகள் ஏற்பட்டு, உயிர் இழப்புகள் அதிகமாகின்றன. இவற்றை தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu