அசூர் ஏர் விமான நிறுவனத்தின் AZV2463 விமானம், இன்று மாஸ்கோவில் இருந்து கோவாவிற்கு வர இருந்தது. அதிகாலை 4:15 மணி அளவில் தெற்கு கோவாவில் உள்ள தபாலின் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நள்ளிரவு 12:30 மணி அளவில், விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக விமான நிலைய இயக்குனருக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதையடுத்து, விமானம் இந்திய வான் வெளிக்குள் நுழைவதற்கு முன்பாக, உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், மாஸ்கோ கோவா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, விமானம் குஜராத் ஜாம்நகர் விமானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது, மீண்டும் இதே போல மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை, விமானம் கோவாவில் இருந்து மாஸ்கோவிற்கு செல்லும்போது மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது மாஸ்கோவில் இருந்து கோவாவிற்கு வரும்பொழுது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.