மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன், வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாகிறது. இதன் ஆரம்ப விலை 31999 ரூபாய் ஆக சொல்லப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படும் இந்த கைப்பேசியை வயர் மற்றும் வயர்லெஸ் மூலமாக சார்ஜிங் செய்ய முடியும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கைபேசியில் 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 சிப் செட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைபேசியில் 256 ஜிபி சேமிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரேம் அடிப்படையில், 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என 2 வேரியண்டுகளாக வெளியாகிறது.