மொஸாம்பிக்கில் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் 33 பேர் உயிரிழந்ததும், 1,534 கைதிகள் தப்பியோடியதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடைபெற்று வந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக நடந்தது. மபுடோவில் சிறைச்சாலைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை உருவாக்கி சிறையில் இருந்த கைதிகள் தப்பியோடினர். இதில் 33 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். மேலும் 1,534 கைதிகள் தப்பினார்கள். இதில் 150 பேரை மீண்டும் கைது செய்தனர். இதேபோல், மற்ற சிறைகளிலும் வன்முறைகள் நடந்தன. தேர்தல் முடிவை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்துள்ளன.