மத்திய அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தது. இதன் தாக்கத்தில் பிரபல கேமிங் நிறுவனங்கள் மாற்றத்தை அறிவித்துள்ளன.
மத்திய அரசு சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் Dream11 மற்றும் மொபைல் பிரீமியர் லீக் (MPL) தங்களது தளங்களில் நிஜ பண கேம்களை உடனடியாக நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. Dream Sports உடைய Dream11 மற்றும் MPL, சட்டத்தை மதித்து செயல்படுவதாக உறுதி செய்துள்ளன. அதேசமயம், பெரும் வருவாய் இழப்பை சமாளிக்க MPL தனது இந்திய ஊழியர்களில் 60% பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. இந்த முடிவை MPL தனது LinkedIn பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய தடை, அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தினாலும், ஆன்லைன் கேமிங் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.