ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆப்பிரிக்க நாடான கானாவில் தகவல் தொடர்பு வர்த்தகத்தில் களமிறங்குகிறார்.
ஆப்பிரிக்காவை பொறுத்தவரை, தகவல் தொடர்பு மற்றும் கைபேசி சேவை ஆகியவற்றுக்கான சந்தை பெருகி உள்ளது. இந்த சூழலை பயன்படுத்தும் வகையில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது Radisys Corp என்ற நிறுவனத்தின் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு கட்டமைப்புகளை உருவாக்குகிறார். Next-Gen InfraCo என்ற ஆப்பிரிக்க நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு இந்த பிராட்பேண்ட் இணைப்பு கட்டமைக்கப்படுகிறது. கானா நாட்டில் 5ஜி சேவையையும் அம்பானியின் நிறுவனம் கட்டமைக்கிறது. நிகழாண்டின் இறுதிக்குள் சேவைகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தியாவில் ஜியோ நெட்வொர்க் மூலம் வலுவான 5ஜி கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ள அம்பானி, ஆப்பிரிக்காவிலும் களமிறங்கியுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.