உத்திரபிரதேசம் மாநிலத்தின் கேங்ஸ்டர் ஆக இருந்த முக்தார் அன்சாரி பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
முக்தார் அன்சாரி கேங்ஸ்டர் ஆக இருந்து உத்திர பிரதேசத்தில் அரசியல்வாதியாக மாறியவர். இவர் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அப்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு அவரது சகோதரரும் காசிபூர் தொகுதி எம்.எல். ஏ ஆன அப்சல் அன்சாரி, முக்தார் அன்சாரி ஜெயிலில் மெதுவாக கொள்ளும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முக்தார் அன்சாரி ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஐந்து முறையும் மவுசதா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது மறைவையொட்டி பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.