141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை - கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

December 14, 2022

முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. அணையின் பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழகமே மேற்கொண்டு வருகிறது. 152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியது. நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது முதல்கட்ட வெள்ள அபாய […]

முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. அணையின் பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழகமே மேற்கொண்டு வருகிறது. 152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியது. நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu