வரும் ஜூலை மாதத்தில் மும்பையின் முதல் பாதாள மெட்ரோ தொடங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 33.5 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆரே வளாகம் முதல் பாந்த்ரா குர்லா வளாகம் வரையில் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 27 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 26 நிலையங்கள் சுரங்கத்தில் அமைந்துள்ளன. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால், மும்பை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய அளவில் குறைக்கப்படும் என நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட 37000 கோடி ரூபாய் மதிப்பில் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில் பாதாள ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6:30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலில் சென்றால், 35 கிலோமீட்டர் பயணம் 50 நிமிடங்களில் நிறைவடைந்து விடும். சாலை மார்க்கமாக சென்றால், அதற்கு 2 மணி நேரம் ஆகும் என சொல்லப்படுகிறது.