மியான்மரில் மூன்று படை பிரிவு தளபதிகளுக்கு அந்நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது.
மியான்மரில் பழங்குடியின படையினரால் சரணடைந்ததற்காக மூன்று படைப்பிரிவு தளபதிகளுக்கு அந்நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த மாதம் சீன எல்லை பகுதியை ஒட்டிய லாவ்காய் நகரை படையினரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பகுதி ராணுவம் சரணடைந்தது.
இது தொடர்பாக லாவுகாய் நகரத்தின் படை பிரிவு தளபதி உட்பட 3 தளபதிகளுக்கு இராணுவம் மரண தண்டனை விதித்தது. முன்னதாக லாவுகாய் நகரில் பல மாதங்களாக சண்டை தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பழங்குடியின படையிடம் படை பிரிவு தளபதிகள் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுடன் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பழங்குடியின படையிடம் மியான்மர் ராணுவம் வீழுந்தது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.